தமிழ்நாடு

எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது: எஸ்பிபி சரண் தகவல்

webteam

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தினமும் தன் தந்தையின் உடல்நிலை பற்றி சமூகவலைதளத்தில் செய்தி வெளியிட்டுவரும் எஸ்பிபி சரண், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக நம்பிக்கையுடன் கூறியுள்ளார். மேலும், சிறந்த சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் குழுவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.