தமிழ்நாடு

தாக்குதல் நடத்தப்படவில்லை: இலங்கை மறுப்பு

webteam

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறுவதில் உண்மை இல்லை என்று இலங்கை அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்திய மீனவரை கடற்படை சுட்டுக் கொல்லவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம், இதுதொடர்பாக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள இலங்கை, இதுதொடர்பாக இந்திய அரசு நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, மீனவர்கள் மனிதாபமான முறையில் நடத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இலங்கை அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.