தமிழ்நாடு

மாணவிகளிடம் ஆபாசமாக பேச பயன்படுத்திய சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்

kaleelrahman

சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாக பேச பயன்படுத்திய இ-மெயிலை சிபிசிஐடி போலீசார் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கேளம்பாக்கத்தில் இயங்கி வரக்கூடிய சுஷில் ஹரி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். திடீரென சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட உடன் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்தது. குறிப்பாக பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறைக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

அங்கிருந்த பென்டிரைவ், ஹார்டிஸ்க் போன்றவற்றை கைப்பற்றினர். அதுமட்டுமின்றி பள்ளி மாணவிகளை பள்ளியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. மேலும் சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப்-ஐ சோதனை செய்தபோது இ-மெயில் வழியாக மாணவிகளுடன் ஆபாசமாக உரையாடியது தெரியவந்தது.

சில பெண்களுடன் ஆபாசமாக இருந்து கொண்டு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசியதற்கான ஆதாரங்களையும் சிபிசிஐடி கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆபாசமாக மாணவிகளுடன் உரையாட பயன்படுத்திய இ-மெயில் கணக்கை சிபிசிஐடி போலீசார் முடக்கினர். இந்த இ-மெயில் தான் பள்ளியின் இ-மெயில். பல ஆண்டுகளாக சிவசங்கர் பாபா இதனை பயன்படுத்தி வருவது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பாபா போதுமான ஒத்துழைப்பை வழங்கியதாகவும், ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும், அதை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.