தமிழ்நாடு

தேவகோட்டை நகராட்சி திமுக பெண் உறுப்பினர் கடத்தப்பட்டாரா? கணவர் புகார்

kaleelrahman

தேவகோட்டையில் 24-வது வார்டு உறுப்பினர் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 5 இடங்களிலும் அதிமுக 10 இடங்களிலும் காங்கிரஸ் 6 இடங்களிலும் அமமுக 5 இடங்களிலும் சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இதனால் நகர்மன்றத் தலைவர் பதவி யாருக்கு என்ற இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், 24-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளரான பிச்சையம்மாள் கடத்தப்பட்டதாக தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் அவரது கணவர் விக்னேஸ்வரன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.