தமிழ்நாடு

லலிதா ஜுவல்லரியில் நகைகள் கொள்ளை

webteam

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள லலிதா ஜுவல்லரியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளது லலிதா ஜுவல்லரி. இன்று காலை நகைக்கடையை திறந்த ஊழியர்கள் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. நகைக்கடையின் பின்புற சுவரை ஓட்டை போட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

திருடுபோன நகைகளின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சாலைகள் மற்றும் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.