தமிழ்நாடு

மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் காலமானார்

webteam

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார். 

தினமணி நாளேட்டின் பொறுப்பாசிரியராக இருந்து, அதன் பின்னர் தமிழன் எக்ஸ்ப்ரஸ் நாளேட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய மூத்தப் பத்திரிக்கையாளர் சுதாங்கன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சைப் பலன்றி உயிரிழந்துள்ளார். விகடன், தினமணி, ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட பலவற்றில் பணியாற்றிய சுதாங்கன், பல விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.