தமிழ்நாடு

காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தேர்வு

webteam

காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனைக் கூட்டம் இரண்டு முறை நடைபெற்றது. சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ செல்வபெருந்தகை காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதே போன்று, காங்கிரஸ் சட்டமன்றக் குழு துணைத் தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ, ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு இருவரும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கே.எஸ்.அழகிரி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.