தமிழ்நாடு

அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு நாடகம்: செல்லூர் ராஜூ

webteam

திமுகவின் அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த செல்லூர் ராஜூ, ’திமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் செய்தது கிடையாது. உரங்கள் விலை உயர்வுக்கு வித்திட்டதே திமுக அரசுதான் ’ எனக் கூறிய அவர். டெல்லியில் விவசாயிகள் போராடுவது மத்திய அரசை எதிர்த்து தான் இதற்கு ஸ்டாலின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டுவது நாடகமாடும் செயல் என விமர்சித்தார்.