தொழிலதிபரின் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்ட ரூ.912 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையின் போது பல்வேறு ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் இருந்த தகவல்களும் திரட்டப்பட்டன.