தமிழ்நாடு

"அவர் காட்டிய பொருளுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதைதான் சீமானுக்கும்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

Veeramani

காட்டிய பொருளுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் அவருக்கும் என சீமான் மேடையில் செருப்பு எடுத்து காட்டி பேசியது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதிலளித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலினை சந்தித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், "கிறிஸ்துமஸ் தினம் என்பதால் முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தற்போது திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது, காங்கிரஸ் -திமுக கூட்டணி கடந்த தேர்தலில் உருவானபோது ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்தவர் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின். காங்கிரஸ் திமுகவுடன் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்படுவோம்" என தெரிவித்தார் .

மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செருப்பு எடுத்து காட்டி பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "காட்டிய அந்த பொருளுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் அவருக்கும்"என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதில் அளித்தார்.