தமிழ்நாடு

இங்கும் 144... அங்கும் 144

webteam

சசிகலா தங்கியிருந்த கூவத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அங்கிருந்து பரப்பன அக்ரஹார சிறைக்கு அவர் கிளம்பிய நிலையில், சிறைப் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சசிகலா சரணடைய வரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்டோர் சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக பெங்களுரு சென்று நீதிமன்றத்தில் சரணடைய உள்ளனர். இதையடுத்து பரப்பன அக்ரஹார சிறையைச் சுற்றியுள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.