ராசிபுரம் நெய்
ராசிபுரம் நெய் freepik
தமிழ்நாடு

பலகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ராசிபுரம் நெய்யின் சுவையின் ரகசியம் என்ன? #DiwaliSweets

PT WEB

தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இதில் பலகாரம் செய்வதற்கு நெய் மிகவும் முக்கியம். தூய்மையான நெய் இருந்தால் பலகாரம் சுவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட தூய்மையான நெய்யானது ராசிபுரம் கிராமத்தில் கிடைக்கிறது என்கிறார்கள் மக்கள்.

இதற்கு காரணம் ராசிபுரத்தை சுற்றிலும் கிராமங்கள் இருப்பதால் அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்கள் கால் நடை வளர்ப்பில் அதிக ஈடுபாடு காட்டி வருவதால், மாடுகளுக்கு நல்ல தீவனம் வழங்கி வருகிறார்கள். அதனால் அங்கு வளர்க்கப்படும் மாடுகள் அதிக சத்துள்ள பாலை தருகிறது. அதிலிருந்து எடுக்கப்படும் நெய்யானது சுவைமிக்க இருக்கிறதாம்!