தமிழ்நாடு

திருவள்ளூர், கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

webteam

கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்ட ரீதியாக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன. கனமழை காரணமாக நாளை தூத்துக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்ததந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். முன்னதாக, கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.