தமிழ்நாடு

தொடர் கனமழை : சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

webteam

தொடர் கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மற்றும் கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேசமயம் சென்னையில் விடுமுறை குறித்து முடிவெடுக்கப்படவில்லை என சென்னை ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர் கனமழையின் எதிரொலியாக, தற்போது சென்னையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.