தமிழ்நாடு

"எஸ்பிபியின் மருத்துவக் கட்டணம் விரைவில் வெளியாகும்" - எஸ்பிபி சரண்

webteam


பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை, அதிகப்படியான கட்டணம் கேட்டதாகவும், அதனை கட்டுவதற்கு எஸ்.பி.பி.குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்துள்ள எஸ்.பி.பி.சரண், இணையதளத்தில் உலா வருபவை அபத்தமான பொய்கள். மருத்துவர்கள் என் தந்தையையும், எங்கள் குடும்பத்தினரையும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டனர்.

மேலும் மருத்துவமனைக்குச் சென்ற ஒவ்வொரு நாளும் வீட்டிற்குச் சென்று வருவது போலவே இருந்தது. எனது தந்தையை அனைத்து மருத்துவர்களும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர். அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை இன்றும் நினைத்து பார்க்கிறேன். மருத்துவக் கட்டணங்கள் தொடர்பான உண்மைகள் விரைவில் வெளியாகும். அதுவரை வதந்திகளை பரப்பாதீர்கள்" என கேட்டுக்கொண்டார்.