சத்தியமங்கலம் அடுத்த பீக்கிரிபாளையம் மலை கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா, பீக்கிரிபாளையம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். நிறைமாத கர்ப்பிணியாக இருந்து இவரது மனைவி மகேஸ்வரிக்கு பிரவச வலி ஏற்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்த அங்கு வந்த ஆம்புலன்ஸ் மகேஸ்வரியை ஏற்றிக் கொண்டு சத்தியமங்கலம் நோக்கி சென்றது. அப்போது ஈஸ்வரன் கோயில் அருகே வந்தபோது மகேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகமானதால் சாலையோரம் 108 ஆம்புலன்ஸை நிறுத்திய மருத்துவ ஊழியர்கள் மகேஸ்வரிக்கு பிரசவம் பார்த்தனர்.
ஆதில், மகேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதனைத்தொடர்ந்து தாயும் சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரசவ வலியால் துடித்த மலைவாழ் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விநாயகமூர்த்தி மற்றும் வாகன ஓட்டுநர் மோகன் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.