தமிழ்நாடு

அனுமதி அட்டையை காண்பித்தும் வாகனத்தை அனுமதிக்காத சுங்கச்சாவடி ஊழியர்-மதிமுக எம்எல்ஏ புகார்

JustinDurai
தனது வாகனத்தை சுங்கச்சாவடியில் செல்ல அனுமதிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன்.
சாத்தூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ரகுராமன், துக்க நிகழ்ச்சிக்காக தஞ்சாவூர் சென்றுவிட்டு மீண்டும் சாத்தூர் திரும்பி வந்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் சட்டமன்ற உறுப்பினர் என தனது வாகன அனுமதி அட்டையை காண்பித்தும் அவரது வாகனத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் எம்.எல்.ஏ.விற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில், சட்டமன்ற உறுப்பினருக்கான வாகன அனுமதி அட்டையை காண்பித்த பிறக்கும் அனுமதிக்காத ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.எல்.ஏ. ரகுராமன், மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சதீஷ் என்ற சுங்கச்சாவடி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.