தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை கொலை வழக்கு - சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

webteam

சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை கொலை வழக்கில், சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவைவே உலுக்கியது. சிபிசிஐடி விசாரித்து வந்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதான 9 காவலர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.