சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தின் அறை எண் 48ல் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பெங்களூரு நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர்கள் 3 பேரும் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது. இதனால், சசிகலா உள்ளிட்ட 3 பேரும் தங்களது 4 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவிக்க பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.