தமிழ்நாடு

அதிமுக பொன்விழா - எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார் சசிகலா

கலிலுல்லா

அதிமுக பொன்விழாவையொட்டி எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

அதிமுக தனது 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை தமிழகம் முழுவதும் பொன்விழா ஆண்டாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு சென்ற சசிகலா அங்கு அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.