தமிழ்நாடு

'சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது' - கோகுல இந்திரா

sharpana

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில், “சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசியவர், ”கட்சியின் தலைவராக இருந்தவர் சசிகலா. அவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றுவோம். ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். உதயநிதிக்கு எதிராக முதல்வரும் துணை முதல்வரும் போராட்டம் நடத்தச் சொல்லவில்லை” என்றார் கோகுல இந்திரா.