தமிழ்நாடு

முதலமைச்சர், சசிகலா தனித்தனியாக பிரதமருக்கு கடிதம்

Rasus

எம்ஜிஆருக்கு நாணயம் வெளியிடக் கோரி முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நாணயமும், அஞ்சல் தலையும் வெளியிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழகம் பெற்ற சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர். எனக் கூறியுள்ள முதலமைச்சர், எம்.ஜி.ஆரின் சேவையைப் பாராட்டி அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

எம்ஜிஆருக்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ள சில மணி நேரங்களில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் கடிதம் எழுதியுள்ளளார். அதில், எம்ஜிஆருக்கு நினைவு நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.