தமிழ்நாடு

சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா

webteam

முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், அரசு ஆலோசகராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ஷூலா பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர், தனது சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். திட்டக் கமிஷன் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற சாந்தா ஷீலா நாயர், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தமிழக முதலமைச்சரின் அலுவலக சிறப்பு அதிகாரியாக கடந்த 2016ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.