தமிழ்நாடு

சேலம்: அக்காவை பள்ளியில் விட தாயுடன் சென்ற குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

webteam

தலைவாசல் அருகே தனியார் பள்ளி பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை தாய் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல அருகே லத்துவாடி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மூட்டை தூக்கும் தொழிலாளி காசி – சுதா தம்பதியர். இவர்களுக்கு வேதாஸ்ரீ, பவனிகாஸ்ரீ ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்,

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சுமைதூக்கும் பணிக்கு காசி சென்றுவிட்ட நிலையில், தாய் சுதா தனது மூத்தமகள் வேதாஸ்ரீயை (4) வீரகனூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் விடச் சென்றுள்ளார். அப்போது ஒன்றரை வயது இளைய மகள் பவனி காஸ்ரீ தாயை பின் தொடர்ந்து சென்றபோது பள்ளி பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கியுள்ளது.

இதை கவனிக்காத ஓட்டுனர் சுதாகர் வாகனத்தை நகர்த்தியுள்ளார். அப்போது தாய் கண்முன்னே குழந்தை தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதைபார்த்த தாய் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த வீரகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஓட்டுனர் சுதாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாயின் கண்முன்னே பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,