தமிழ்நாடு

’கலெக்டர உடனே பார்க்கணும்’ : ஆட்சியர் அலுவலகம் முன் ரகளை செய்த நபர் - சேலத்தில் பரபரப்பு

கலிலுல்லா

காவல்துறையினர் தாக்கியதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் நிறுவன மேலாளராக பணிபுரியும் தனிஷ் என்பவர், அலுவல் நிமித்தமாக சேலம் வந்துள்ளார். அப்போது காவல்துறையினர் தன்னை தாக்கியதாக கூறிய அவர், ஆட்சியர் அல்லது உயரதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டுமெனக்கூறி ரகளை செய்தார்.

ஆனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் அவரை கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டிய பொதுமக்கள், ரகளை செய்த நபர் குறித்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். வெளி மாநிலத்தை சேர்ந்த நபர் எதற்காக சேலம் வந்தார் அவர் அளவுக்கு அதிகமான போதை பொருட்களை ஏதும் பயன்படுத்தினாரா அல்லது அவர் மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளாரா அவருக்கு நேர்ந்தது என்ன என்பது குறித்து காவல்துறையினர்தான் விசாரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனர்.