தமிழ்நாடு

சேலம்: போக்சோ சட்டத்தில் கைதான விசாரணை கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை

சேலம்: போக்சோ சட்டத்தில் கைதான விசாரணை கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை

kaleelrahman

சேலத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மத்திய சிறையில் இருந்த விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். சேலத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்த இவர், 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அசோக்குமார் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தின் மனு செய்ததாகவும் ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் சிறையிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அசோக்குமாரின் சடலத்தை மீட்ட சிறைத்துறை காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.