தமிழ்நாடு

சேலம்: அடியாட்களை அழைத்து வந்து ஆயுதப்படை காவலர் தாக்கியதாகப் புகார்

Veeramani

சேலத்தில் அடியாட்கள் உதவியோடு ஆயுதப்படை காவலர் ஒருவர் உறவினர்களை கத்தியால் தாக்கிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் ஆயுதப்படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வரும் மாயவன் என்பவர், மது போதையில் அவரது உறவினர்களான அருண்குமார், அசோக்குமாருடன் தகராறில் ஈடுபட்டு சென்றுள்ளார். பின்னர், அடியாட்கள் 15பேரை அழைத்து வந்து, வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், அருண்குமாரும், அசோக்குமாரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.