தமிழ்நாடு

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ‘சாட்டை’ துரைமுருகன் கைது – நாம் தமிழர் கட்சி கண்டனம்

Veeramani

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ‘சாட்டை’ துரைமுருகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி கனிமவளக்கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் ‘சாட்டை’ துரைமுருகன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனைவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வழக்குகளிலிருந்து மீண்டுவர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.