தமிழ்நாடு

ரூ.1,480 கோடி ரேஷன் ஊழல்: முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- சீமான்

Veeramani

ரேஷன் பொருட்கள் கொள்முதலில் ரூ.1480 கோடி ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ரேஷன் பொருட்கள் கொள்முதலில், அதிகமான விலையில் விநியோகித்து 1480 கோடி ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவனத்தின்மீதும், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? தொடர்ந்து கிறிஸ்டி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிப்பதன் காரணம் என்ன?” என தெரிவித்திருக்கிறார்