தமிழ்நாடு

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: மத்திய அரசு தகவல்

Rasus

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு விண்வெளித்துறை அமைச்சகம் சார்பில் அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த பதிலை அளித்துள்ளார். ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்கெனவே ஒரு ராக்கெட் ஏவுதளம் உள்ள நிலையில் அடுத்தபடியாக தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது