தேமுதிக பொருளாளர் சுதீஷ் மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே நடந்த பேச்சுவார்த்தை கூட்டணி சார்ந்த பேச்சு என சொல்லப்படுகிறது.
தேமுதிக பொருளாளர் சுதீஷூடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி நிலைப்பாட்டை எடுக்காத நிலையில், தேமுதிக பொருளாளர் சுதீஷூடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக மாநிலங்களவை எம்பி தனபால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதேபோல், புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியுடன், அதிமுகபாஜக நிர்வாகிகள் ஆலோசித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியநயினார் நாகேந்திரன், நண்பர் என்றஅடிப்படையில் சுதீஷிடம் பேசியதாககூறினார்.