தமிழ்நாடு

மதுரை: கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு!

webteam

மதுரையில் ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளன.மருந்துகளை திருடிய ஒப்பந்த ஊழியரை பிடித்து மதிச்சயம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

முன்னதாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை ஆபத்துக்காலங்களில் இருந்து காப்பாற்ற பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துகள், கள்ளச்சந்தையில் அதிகவிலைக்கு விற்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருதுகளை விற்பனை செய்வோரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.