தமிழ்நாடு

டிக்கெட் எடுத்தவர்களுக்கு பிரச்னை இல்லை... ரெட் பஸ் நிறுவனம் வி‌ளக்கம்

webteam

பொங்கல் பண்டிகைக்கு ரெட் பஸ் இணையதளம் மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரெட் பஸ் இணையதளத்தின் மூத்த ‌இயக்குநர் அளித்திருக்கும் விளக்கத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவைத் தரத்தை பராமரிக்காத சில பேருந்து உரிமையாளர்கள் ரெட்பஸ் இணையத்தில் இருந்து வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ‌அவர்கள், டிக்கெட் முன்பதிவு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் பஸ் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பயணத்தை உறுதி செய்வது குறித்து மீண்டும் அறிவிப்பு அனுப்புமாறு ரெட் பஸ் தளத்துடள் தொடர்பில் உள்ள பேருந்து உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ரெட் பஸ் இணையதளம் மற்றும் ஆப் மூ‌லம் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையான பேருந்து சேவைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் தெரிவித்திருந்த நிலையில் ரெட் பஸ் விளக்கம் அளித்திருக்கிறது.