தமிழ்நாடு

ஜனவரி 30 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் - தமிழக அரசு அறிவிப்பு

Sinekadhara

தமிழ்நாட்டில் வரும் 30 ஆம் தேதி ஞாயிறன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஜனவரி மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக ஜனவரி 30 ஆம் தேதியன்று ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவித்துள்ளது. இந்த பணி நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையன்று ரேஷன்கடைகளுக்கு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.