தமிழ்நாடு

தாமரை இல்லாமல் ஆட்சி மலராது : சி.பி. ராதாகிருஷ்ணன்

webteam

தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “மத்திய தலைமையின் கீழ்தான் மாநில பாஜக தலைமை இயங்குவதை அதிமுகவினர் தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியில் இருந்தபோது கிராமசபை கூட்டங்களை நடத்தாத திமுக தற்போது அரசியலுக்காக கிராமசபையை நடத்துகிறது. தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது” என்றார்.

அதிமுக - பாஜக இடையே கூட்டணி குறித்தும் கொள்கை குறித்தும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கும் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.