தமிழ்நாடு

ராமநாதபுரம்: இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்து - இரு இளைஞர்கள் உயிரிப்பு

webteam

கீழக்கரை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பனையங்கால் பகுதியைச் சேர்ந்த ஐந்து கட்டிட தொழிலாளிகள் இரண்டு இருசக்கர வாகனங்களில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக புத்தாடைகள் வாங்க ராமநாதபுரத்திற்கு வந்துள்ளனர். அப்போது கீழக்கரை திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தோணி பாலம் அருகே வந்த போது, கர்நாடகாவைச் சேர்ந்த கார் மூன்று பேர் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கில் வந்த தனிக்கோடி (24), அருண் (26) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிரிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆடைகள் எடுக்க வந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அவர்களின் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து திருப்புல்லாணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.