தமிழ்நாடு

ராமநாதபுரம்: தடுப்பூசி போட்டுக்கொள்ள கிராம மக்களிடம் கெஞ்சிய செவிலியர்கள்

Veeramani

ராமநாதபுரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கிராம மக்களிடம் செவிலியர்கள் கெஞ்சிய சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழகாஞ்சரங்குளம் கிராம மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகாரிகளும், செவிலியர்களும் கெஞ்சியபோதும் மக்கள் கண்டுகொள்ளவில்லை. கடைசியாக ஏழு பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.