தமிழ்நாடு

ராமஜெ‌யம் கொலை வழக்கு: தகவல் அளித்தால் பரிசு

webteam

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு, ஐந்தே முக்கால் கோடி ரூபாய் ரயில் கொள்ளை வழக்குகளில் இதுவரை முக்கிய தகவல் எதுவும் கிடைக்காததால் அவை குறித்து தகவல் அளிக்க பொதுமக்களிடம் சிபிசிஐடி வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பான தகவல்களை அளிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. 004-28511600 என்ற எண்ணை தொடர்புகொண்டு தகவல் அளிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.