தமிழ்நாடு

சிறையில் நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம்..!

சிறையில் நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம்..!

webteam

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி, சனிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். 

“கடந்த 28 ஆண்டுகளாக நானும் எனது கணவர் முருகனும் சிறையில் இருந்து வருகிறோம். இதனால் எங்களது மகளையும் பிரிந்துள்ளோம். ஆகவே எங்களை முன்விடுதலை செய்யக்கோரி அரசுக்கு கோரிக்கையும் விடுத்து வருகிறோம். 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள எங்களை முன்விடுதலை செய்யுங்கள்” எனசிறைத் துறைக்கு மனு அளித்துவிட்டு சனிக்கிழமை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார் நளினி.

இந்த உண்ணாவிர போரட்டம் 4-வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 இதனிடையே இலங்கையில் உள்ள முருகனின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை வர இருப்பதாகவும் அவருடன் இருக்க ஒரு மாதம் பரோல் கேட்டு கடந்த வாரம் சிறைத் துறைக்கு நளினி மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.