Chandan
Chandan pt desk
தமிழ்நாடு

“முதுமையால் அவதியுறும் என் தாயாருக்கு உதவ அனுமதிக்க வேண்டும்” இலங்கை அதிபருக்கு சாந்தன் கடிதம்

webteam

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் இலங்கை அதிபருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

சாந்தன் கடிதம்

அக்கடிதத்தில் “வயது முதிர்வுடன் இலங்கையில் வசித்துவரும், எனது தயாரை சந்தித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. முதுமை காலத்தில் உடனிருந்து அவருக்குத் தேவையான உதவிகளை செய்ய விரும்புகிறேன். எனவே நான் இலங்கைக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் மூலமாக இலங்கை அதிபருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது.