இந்தியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் சரி வட இந்தியாவிலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரசிகர்களை பேனர் வைக்க வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளேன்." என்று தெரிவித்தார்.