தமிழ்நாடு

நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை

sharpana

பூத் கமிட்டிக்கு நிர்வாகிகளை நியமிக்கும்போது பணம் பெறக்கூடாது என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம்  எச்சரிக்கை விடுத்துள்ளது

’அரசியலுக்கு வருகிறேன்’ என்பதை உறுதி செய்துள்ள ரஜினி டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி குறித்து அறிவிப்பதாக கூறியுள்ளார். இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி ரஜினியின் அரசியல் பணிகள் தீவிரமாகியுள்ளன.

இந்நிலையில், ’பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும்போது பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்’ என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினியின் மக்கள் மன்றம் எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25 க்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது.