தமிழ்நாடு

ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள் - ராஜேந்திர பாலாஜி

webteam

ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள் அச்சிடப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வரின் ஒப்புதலை பெற உள்ளதாகவும் அவர் கூறினார். 

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை கொண்டு சேர்க்க முடியும் என்றும், எனவே இதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார், ட்விட்டர் மூலம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அமைச்சர் ட்விட்டரிலேயே இவ்வாறு பதில் அளித்துள்ளார்.