தமிழ்நாடு

வானிலை முன்னறிவிப்பு: தென்தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழை வாய்ப்பு

Sinekadhara

தென்தமிழக மாவட்டங்களில் நாளை முதல் 10ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு தொடக்கமவரை தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவந்த கனமழையால் தென்தமிழக மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாயின. மீண்டும் தற்போது 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதிவரை தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.