தமிழ்நாடு

அப்பாடா..! மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்தது

webteam

புயல் கரையை கடந்தாலும் உள் மாவட்டங்களில் மழை தொடரும்.

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை  கடந்துவிட்டதாக தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் தாக்கம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும் எனத் தெரிவித்துள்ள அவர், மாண்டஸ் புயல் இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனக் கூறியுள்ளார்.

அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியதாகவும், சென்னை நுங்கம்பாக்கம், பூந்தமல்லியில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தவற விடாதீர்: சென்னையில் 3 மணி நேரத்தில் 65 மரங்கள் முறிந்து விழுந்தன