hevay rain
hevay rain pt desk
தமிழ்நாடு

“அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்; 5 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம்

webteam

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல் உட்பட மொத்தம் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.