தமிழ்நாடு

அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

webteam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 21செமீ மழை பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளது