தமிழ்நாடு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

rajakannan

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்யவில்லை. வெயில் அடிக்க தொடங்கியிருக்கிறது..

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. தென் தமிழகம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை மழையை எதிர்பார்க்கலாம். தென் கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.