தமிழ்நாடு

தமிழகத்தில் பரவலாக மழை.. 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பரவலாக மழை.. 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Rasus

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர் மற்றும் சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. சில மாவட்டங்களில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, மாங்குடி, கங்களாஞ்சேரி, கூத்தாநல்லூர், வடகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் இருந்தே மழை பெய்து வருகிறது. இதேபோல தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதேபோல புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.