தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் துணிக்கடைகளில் வருமான வரித்துறை சோதனை

கலிலுல்லா

காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 1926ம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது பச்சையப்பாஸ் துணிக்கடை. இந்த கடை அப்பகுதியில் பிரபலமான துணிக்கடையாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், பச்சையப்பாஸ் துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தவிர, காஞ்சிபுரத்தில் உள்ள மேலும் சில துணிக்கடைகள், நிதி நிறுவனம் ஒன்றிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.